சந்திராயன் 3 : சீன விஞ்சானியின் பகிர் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த இந்திய விஞ்சானி வீரமுத்துவேல்!  - Seithipunal
Seithipunal


நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் 3 தரையிரக்கப்படவில்லை என்று, சீன விஞ்ஞானி தெரிவித்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சீன விஞ்ஞானியின் குற்றச்சாட்டுக்கு சந்திராயன் 3 திட்டத்தின் இயக்குனரான வீரமுத்துவேல், பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அவரின் அந்த பேட்டியில், "சீன விஞ்ஞானி லண்டரை தரையிறக்கவில்லை என்று குற்றம் சாட்டவில்லை. அவர் சொல்வது என்னவென்றால், நாம் நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறக்க வில்லை என்றுதான் குற்றம் சாட்டுகிறார். 

நாம் ஆரம்பம் முதலே நிலவின் தென் துருவ பகுதியின் அருகே தான் லேண்டெரை தரையிறக்க உள்ளோம் என்று சொல்லி வருகிறோம்.

நிலவின் தென்துருவ பகுதியில் லேண்டெரை தரையிறக்கியுள்ளதாக நாம் எங்குமே குறிப்பிடவில்லை.

உலகில் முதல் நாடக 70 டிகிரி லேட்டிடியூட் பகுதிக்கு பயணித்துச் சென்று, நிலவில் நாம் தானே களமிறங்கி இருக்கிறோம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை" என்று வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chandrayaan 3 China ISRO India VeeraMuthuvel Moon


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->