"டிஜிட்டல் மோசடிகளுக்குக் கடிவாளம்!": புதிய சிம் கார்டு விதிகளையும் சரிபார்ப்பையும் கடுமையாக்கும் மத்திய அரசு!
Centre Tightens New SIM Card Verification Rules to Combat Digital Frauds and Scams
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டிஜிட்டல் கைது (Digital Arrest) உள்ளிட்ட ஆன்லைன் நிதி மோசடிகள் மற்றும் போலி எண்களைப் பயன்படுத்தி நடக்கும் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், புதிய சிம் கார்டுகள் வழங்குவதற்கான சரிபார்ப்பு நடைமுறைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. Communications Today செய்தி அறிக்கையின்படி இப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
முக்கியக் கட்டுப்பாடுகள் & புதிய நடைமுறைகள்
நிகழ்நேரச் சரிபார்ப்பு கட்டாயம் (Real-time Verification): புதிய சிம் கார்டு வாங்கும் வாடிக்கையாளர்களின் விவரங்களை உடனடியாக 'நிகழ்நேர டிஜிட்டல் சரிபார்ப்பு' (Real-time Verification) செய்வதைத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டாயமாக்க வேண்டும்.
தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவு: போலி ஆவணங்கள் மூலம் புதிய சிம் கார்டுகள் வழங்கப்படுவதைத் தடுக்க, வாடிக்கையாளர்களின் அடையாளச் சான்றுகளைத் துல்லியமாகச் சரிபார்த்த பின்னரே சிம் கார்டுகளைச் செயல்படுத்துமாறு (Activate) தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனிநபர் சிம் கார்டு வரம்பு:
இந்தியாவில் ஒரு தனிநபர் தனது பெயரில் அதிகபட்சமாக 9 சிம் கார்டுகள் வரை மட்டுமே வைத்திருக்க அனுமதி உண்டு.
பாதுகாப்புப் பதற்றம் நிறைந்த ஜம்மு-காஷ்மீர், அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்கு அதிகபட்சமாக 6 சிம் கார்டுகள் மட்டுமே வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போலி இணைப்புகள் நீக்கம்: Press Information Bureau (PIB) தகவலின்படி, போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் லட்சக்கணக்கான செல்போன் இணைப்புகளை அடையாளம் கண்டு அவற்றை உடனடியாக மறுசரிபார்ப்பு செய்யும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
English Summary
Centre Tightens New SIM Card Verification Rules to Combat Digital Frauds and Scams