கடற்கரையில் பற்றி எரிந்த படகுகள் - அதிர்ச்சியில் மீனவர்கள்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று மீனவர்களின் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதலில், ஒரு படகில் இருந்து பரவிய தீ, அடுத்தடுத்து மற்ற படகுகளுக்கு பரவி பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதைப்பார்த்த படகு உரிமையாளர்கள் தீயை அணைக்கும் முயற்சியிலும், சம்பவம் குறித்து தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் அளித்தனர். அந்தத் தகவலின் படி போலீசார் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியதில், படகில் வைத்திருந்த எல்பிஜி சிலிண்டர்கள் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுமார் ஐம்பதுக்கும் மேலான படகுகள் எரிந்ததால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boats fire accident in visakapatinam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->