வரதட்சிணையாக சிறுநீரகம் வேண்டும்! மருமகளை பதற வைத்த மாமியார் மீது பாய்ந்த வழக்கு!
Bihar Dowry case
பிகாரின் முஸாபர்பூரில் நடந்த ஒரு அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவம், சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண வரதட்சணையாக பைக், நகை வழங்க முடியாததால், மருமகளிடம் சிறுநீரகத்தை கேட்டு மிரட்டியதாக மாமியார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2021ஆம் ஆண்டு திருமணமான தீப்தி என்பவர், இதுதொடர்பாக முஸாபர்பூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆரம்பத்தில் திருமண வாழ்க்கை சுமூகமாக இருந்ததாக கூறிய அவர், பின்னர் மாமியார் மற்றும் குடும்பத்தினர் தன்னை வாராந்து மிரட்டி, பைக் மற்றும் பணம் தரக்கோரியதாகவும், மனத்துயரத்துடன் உடலுறுத்தல் செய்து வீட்டை விட்டு விரட்டியதாகவும் தெரிவித்தார்.
மேலும், தனது கணவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பது குறித்து தெரிந்த பிறகு, மாமியார் அவரிடம் "நீ என்னையும், என் மகனையும் ஏமாற்றிவிட்டாய். பைக், நகை கொடுக்க முடியாதெனில் உன் சிறுநீரகத்தை தர வேண்டும்" என மிரட்டியதாக தீப்தி புகார் அளித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் முயலப்பட்டாலும், தீப்தி விவாகரத்து கோரிக்கை வைத்ததால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது அவரது கணவர், மாமியார் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.