வீடு கட்ட விடாமல் தடுத்து கொலை மிரட்டல்...தனி நபர் மீது மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர் புகார்!
Threat of murder to prevent building a house The victim has filed a complaint with the district collector against an individual
அரசு வழங்கிய பட்டா இடத்தில் வீடு கட்ட விடாமல் தடுத்து நிறுத்தி வரும் கொலை மிரட்டல் விடுத்துவரும் அரசுஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்புகார் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம், பெரியபுத்தூரில் அரசு வழங்கிய பட்டா இடத்தில் வீடு கட்டும் பொழுது வீட்டை கட்ட விடாமல் தடுத்து எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்ற அரசு ஊழியரான (ரத்தினசாமி குடும்பத்தார்கள்)ஆனந்த், கிட்டான், ராமசாமி ஆகியோர்கள் மீது நடவடிக்கை எடுத்தும், மேற்படி நபர்கள் அரசு வழங்கிய 2 செண்ட் பட்டாவை விட ஒவ்வொருவரும் கூடுதலாக ஐந்து சென்ட் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி உள்ளார்கள். மேற்படி ஆக்கிரமிப்பை அகற்றி வீடு இல்லாத மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுதல் தொடர்பான மனு.
நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனக்கு திருமணமாகி 18 வருடங்கள் ஆகிறது. எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 2007 ஆம் ஆண்டு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. அன்றிலிருந்து குடிசை வீடு கட்டி வாழ்ந்து வந்தேன். தற்போது காங்கிரீட் வீடு கட்ட முடிவு எடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 2025-ல் வீடு கட்டும் பணி தொடங்கினேன். வீடு கட்ட அஸ்திவாரம் போடப்பட்டுள்ள நாளில் இருந்தே அருகில் வசிக்கும் அரசு ஊழியரான ரத்தினசாமி மற்றும் அவரது குடும்பத்தார்கள் இடம் தகராறு சம்மந்தமாக பிரச்சனை செய்து வந்தார்கள். அதன் பின்பு நான் முறையாக வடடாட்சியரிடம் மனுக் கொடுத்து சர்வேயர்.
VAO மூலம் எனது,இடத்தை அளந்துதான் நான் வீடு கட்டும் வேலையை செய்து வருகிறேன். இச்சூழ்நிலையில் எனது வீட்டு வேலை மூன்று மாதங்களாக வேலை செய்ய விடாமல் தடுத்து வருகிறார்கள் அருகில் வசிக்கும் (அரசு ஊழியர் ரத்தினசாமி மற்றும் குடும்பத்தார்கள்). அதே ஊரைச் சேர்ந்த ஆனந்த், கிட்டான், ராமசாமி, ஆகியோர்கள் தொடர்ச்சியாக பணி செய்ய விடாமல் தடுத்து வருகிறார்கள். எங்களை தகாத வார்த்தைகளால் பேசுவதும், வேலை செய்யும் பொழுது கற்களை கொண்டு தாக்க முயல்வதும் இது போன்ற செயல்களை செய்து வருகிறார்கள். இந்த பிரச்சனை சம்மந்தமாக இரண்டு மாதங்களுக்கு முன்பு 09.04.2025 அன்று தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தும், பேச்சு வார்த்தை நடத்தியும் (SR காப்பி பெற்றுள்ளேன்) அன்றிலிருந்து இது வரையில், நான் வீடு கட்ட முடியாத சூழ்நிலையில்தான் இருந்து வருகிறேன். நான் வீடு கட்டும் பணி தொடங்கும் பொழுது ரத்தினசாமி அரசு ஊழியர்,
அவரது குடும்பத்தார்கள் கிட்டான் த/பெ. நாச்சி, ஆனந்த் த/பெ. கிட்டான், ராமசாமி த/பெ.பொட்டி ஆகியோர்கள் தொடர்ச்சியாக இடையூறு செய்வதும், என்னை தகாத வார்த்தைகளால் பேசுவதும் கொலை மிரட்டல் விடுவதும் தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள். மேலே குறிப்பிட்டுள்ள இவர்கள்தான் இவர்களுக்கு அரசு வழங்கிய 2 செண்ட் பட்டாவை காட்டிலும் கூடுதலாக ஒவ்வொரு நபரும் 5 செண்ட்க்கு மேலாக புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளார்கள். இவர்கள், ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை மீட்டு வீடு இல்லாத மக்களுக்கு வழங்க தாங்கள் நடவடிக்கை எடுக்குமாறும், எனது பட்டா நிலத்தில் வீடு கட்டுவதற்கு தகராறு செய்தும், எனக்கு கொலை மிரட்டல் விடுகின்ற இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்தும் எனக்கு வீடு கட்ட பாதுகாப்பு வழங்குமாறும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்கள்.
English Summary
Threat of murder to prevent building a house The victim has filed a complaint with the district collector against an individual