குன்னூர் மார்க்கெட் கடைகளை காலி செய்ய நகராட்சி நோட்டீஸ்..அமைச்சரை சந்திக்க விக்ரமராஜா முடிவு! - Seithipunal
Seithipunal


மார்க்கெட் கடைகளை 15 நாட்களுக்குள் காலி செய்ய குன்னூர்  நகராட்சி  அதிகாரிகள்  நோட்டீஸ் வழங்கியதால் பெரும் பரபரப்பு  ஏற்பட்டது. 

நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்கெட் பகுதியில் உள்ள பழைமை வாய்ந்த சுமார் 800 கடைகளை அப்றப்படுத்தி புதிய கடைகளை கட்ட சுமார் 41.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த மூன்று மாதங்ளுக்கு முன்பு   அடிக்கல் நாட்டப்பட்டது.
 
நாமக்கல்  பகுதியை சேர்ந்த GV கன்சக்சன்(ஒப்பந்ததாரர்)எடுத்து  இந்த பணியை துவங்க உள்ள நிலையில் இதற்க்கு குன்னூர்  மார்க்கெட்  வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் குன்னூர் சார்  ஆட்சியர் சங்கீதா  தலைமையில் நகராட்சி  ஆணையாளர் இளம்பரிதி,மற்றும் குன்னூர் DSP.ரவி, தாசில்தார் ஜவஹர்,  முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

 இதனை தொடர்ந்து   மார்க்கெட் கடைகளை 15 நாட்களுக்குள் காலி செய்ய குன்னூர்  நகராட்சி  அதிகாரிகள்  நோட்டீஸ் வழங்கியதால் பெரும் பரபரப்பு  ஏற்பட்டது. இதனை முன்னிட்டு கடந்த நேற்று ஞாயிற்க்கிழமை அன்று அடையாளமாக அனைத்து கடைகளையும் ஒருநாள் முழுவதும்  அடைத்து வியாபாரிகள்  எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில்  தமிழ்நாடு வணிகப் பேரவை மாநில இளைஞர் அணி அமைப்பாளர் பிரதாப் ராஜா நேற்று மார்க்கெட் கடைகளை பார்வையிட்ட பிறகு வியாபாரிகளிடம் தமிழ்நாடு வணிகப்பேரவை தலைவர் விக்ரமராஜா அவர்கள்  இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அமைச்சர் அவர்களை சந்தித்து பிரச்சனைகளை தீர்வுகாண இருப்பதாகவும் மார்க்கெட் வியாபாரிகளுக்கு இளைஞரணி சார்பாக என்றென்றும் துணை நிற்போம்  என்றும் நல்ல  முடிவு கிடைக்கும் என்றும் கூறினார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Municipality notice to vacate the shops in Kunnur market Vikramaraja decides to meet the minister


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->