துணை தேர்வு எழுதுவதற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் : மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் ஆய்வு! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் நகராட்சியில் உள்ள ஸ்ரீ நிகேதன் பாடசாலை மேல்நிலைப் பள்ளியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 11 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவ மாணவியருக்கு துணை தேர்வு எழுதுவதற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 11 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவ மாணவியருக்கு துணை தேர்வு எழுதுவதற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நேற்றும் இன்றும் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் ஸ்ரீ நிகேதன் பாடசாலை மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு கலை பிரிவில் தேர்ச்சி பெறாத மாணவ மாணவியர்களுக்காக சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கான 28 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு துணைத் தேர்வுக்கான பாடம் எடுத்து வருகிறார்கள். 

இதேபோல் மருத்துவ கல்லூரி கூட்டரங்கில் அறிவியல் பாடப் பிரிவில் 11 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான 16 ஆசிரியர்கள் கொண்டு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. இத்திட்டத்தின் நோக்கம் என்னவென்றால் அனைத்து மாணவர்களும் துணை தேர்வுகள் மூலம் தேர்ச்சி பெற்று உயர் கல்விக்கு கொண்டு செல்வதற்கான வழிகாட்டுதல் தான் நோக்கமாகும் என மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தெரிவித்துள்ளார்.

இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மோகனா (பொ) , திருவள்ளூர் மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் அமுதா, உதவி திட்ட அலுவலர் பாலமுருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கல்வி) பவானி, தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Special training classes for writing the assistant examination District Collector M. Prathap s inspection


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->