அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.2,500 உரிமைத்தொகை - காங்கிரஸ் வெளிட்ட அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மாநிலத்தில் அரசியல் சூழ்நிலை பரபரப்பாக உள்ளது.

மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பீகாரில், தற்போது பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி மேற்கொண்டு வருகிறது. அதனைத் தொடர விரும்பும் பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற போராடும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளும், வாக்காளர்களை ஈர்க்க வலுவான தேர்தல் உத்திகளை வகுத்து வருகின்றன.

இதனிடையே, காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பிரசாரத்தை அதிகாரபூர்வமாக தொடங்கியுள்ளது. ஆரம்பக் கூட்டங்களில் மக்களை ஈர்க்கும் வாக்குறுதிகளும் இடம்பெற்றன.

அதில் குறிப்பிடத்தக்க ஒன்று, காங்கிரஸ் பீகாரில் ஆட்சியமைத்தால், மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து பெண் குடிமக்களுக்கும் மாதம் ரூ.2,500 உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஆகும்.

இந்த வாக்குறுதி, மகளிர் வாக்காளர்களை தனது பக்கம் கொண்டுவரும் முயற்சியாகவும், பிற மாநிலங்களில் செயல்பட்ட மகளிர் நலத்திட்டங்களை பீகாரிலும் செயல்படுத்தும் முன்னெச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bihar Congress Manifesto 1st announce


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->