ஜெயிலுக்கு போன கணவன்.. திரும்பி வந்து, அந்தரங்க உறுப்பில் மனைவியை கத்தியால் குத்தி அரங்கேறிய கொடூரம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் பஜார் சாலையில் பிரியங்கா என்ற பெண் இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். பிரியங்காவின் கணவர் தயானந்தா பெங்களூரில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் கைதாகி பல மாதங்களாக சிறை தண்டனை அனுபவித்து வந்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன் வெளிவந்த அவர் நேற்று நள்ளிரவு நேரத்தில் நன்றாக குடித்துவிட்டு பிரியங்கா மற்றும் குழந்தைகள் வசிக்கும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பிரியங்காவுக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பிரியங்காவும் அவருடன் சேர்ந்து சண்டை இட்டுள்ளார். அப்போது மிகுந்த கோபத்தில் இருந்த தயானந்தா பிரியங்காவை அடித்து கீழே தள்ளிவிட்டு ஓடி சென்று சமையலறையில் இருந்து கத்தியை எடுத்து வந்து தங்களது குழந்தைகளுக்கு முன்பாகவே பிரியங்காவின் பிறப்புறுப்பில் குத்தியுள்ளார்.

மேலும் தொடர்ந்து வயிற்றில் புத்தி பிரியங்காவை கொல்ல முயற்சித்துள்ளார். அப்போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தயானந்தவை பிடித்துக் கொண்டு பிரியங்காவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Banglore men attacked wifes Private part In doubtful life


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->