7 பேரை பலிகொண்ட ஆர்சிபியின் வெற்றிக் கொண்டாட்டம்! பெங்களூரில் பெரும் சோகம்! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 18வது சீசனின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்னில் வீழ்த்தி, ஆர்சிபி தனது வரலாற்றிலேயே முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது. இதனால் ஆர்சிபி ரசிகர்கள் வெற்றியை கொண்டாடும் உற்சாகத்தில், பெங்களூரு முழுக்கவே பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

வெற்றி விழாவை முன்னிட்டு, பெங்களூருவில் திறந்தவெளி பஸ்சில் வீரர்கள் பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. விதான சவுதாவில் தொடங்கி, சின்னசாமி ஸ்டேடியத்தில் முடியும் என அறிவிக்கப்பட்ட பேரணிக்காக ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.

மாலை 6 மணிக்கு நடைபெற உள்ள பாராட்டு விழாவுக்காக, சின்னசாமி மைதானத்தை சுற்றி ரசிகர்கள் நேரத்துக்கு முந்தியே திரண்டனர். ஆர்சிபி வீரர்கள் வருவதற்குள் ரசிகர்கள் வேலிகள், சுவர்களில் ஏறியதால் பரபரப்பு நிலவியது.

இதைத் தொடர்ந்து ஏற்பட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். நிலைமையை  கட்டுப்படுத்த காவல்துறையும், அவசர சேவைகள் குழுவும் துரிதமாக செயல்பட்டு வருகின்றன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bangalore RCB Royal Challenger victory celebration accident


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->