அவமானப்படுத்திய இளையராஜா.. கோபத்தில் ரஜினிக்கு கங்கை அமரன் எழுதிய பாடல்! - கங்கை அமரன் ஓபன் டாக்!
Gangai Amaran wrote a song for Rajinikanth in anger after he was humiliated by Ilayaraja Gangai Amaran Open Talk
தமிழ் சினிமாவில் பல துறைகளில் தனது தடத்தை பதித்துள்ள கங்கை அமரன், சமீபத்திய பேட்டியில் தனது சகோதரர் இளையராஜாவுடன் ஏற்பட்ட ஒரு சம்பவத்தையும், அதனால் உருவான பாடலையும் குறித்து பகிர்ந்துள்ளார்.
பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர், நடிகர் என பல முகங்களை கொண்ட கங்கை அமரன், தற்போது ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் நடிகை ரோஜாவும் இணைந்து நடித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகர் பிரபுவின் அண்ணனும் தயாரிப்பாளருமான ராம்குமாருடன் நடந்த உரையாடலில், தனது வாழ்க்கையில் நினைவில் நிற்கும் ஒரு சம்பவத்தை அவர் வெளிப்படுத்தினார்.
“ஒருநாள் நான், இளையராஜா மற்றும் பாஸ்கர் மூவரும் சேர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தோம். அப்போது ராஜா அண்ணன், இனிமேல் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டாம் என்று கூறினார். அதற்கு நான் உடனே பதிலளித்து, நாம் சந்திக்கும் நேரம் அதுதான் என்பதால் தான் வருகிறேன், இனிமேல் வரமாட்டேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டேன்” என்று கங்கை அமரன் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தனது மனதில் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறிய அவர், அதற்குப் பிறகே “ஆண் என்ன பெண் என்ன” என்ற பாடலை எழுதியதாகவும் குறிப்பிட்டார். அந்த பாடலை நேரடியாக இளையராஜாவிடம் கொடுத்ததாகவும் அவர் கூறினார்.
கங்கை அமரன் எழுதிய பல பாடல்கள் எளிமையான வரிகளாலும் ஆழமான கருத்துகளாலும் ரசிகர்களிடம் நீண்டநாள் நினைவில் நிற்கும் வகையில் அமைந்துள்ளன. அவரது இந்த வெளிப்பாடு, அந்தப் பாடலின் பின்னணியைப் பற்றிய புதிய பார்வையை ரசிகர்களுக்கு அளித்துள்ளது.
பல வெற்றிப்படங்களின் மூலம் தனித்துவமான இடத்தை பெற்றுள்ள கங்கை அமரன், இன்றும் தனது கலைப்பயணத்தை தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Gangai Amaran wrote a song for Rajinikanth in anger after he was humiliated by Ilayaraja Gangai Amaran Open Talk