ஒடிசாவில் மீண்டும் ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் அம்படோலா அருகே சரக்கு ரயிலின் 4 பெட்டிகள் இன்று (சனிக்கிழமை) தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இநாத ரயில் சிறப்பு வழித்தடத்தில் அம்படோலாவில் இருந்து லாஞ்சிகரில் உள்ள வேதாந்தா லிமிடெட் ஆலைக்கு சரக்குகளை எடுத்து சென்று கொண்டிருந்த போது நான்கு பெட்டிகள் தண்டவாளத்தில் இறங்கியதாக தெரிகிறது. இந்த விபத்தில், உயிர் சேதமோ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. 

சிறப்பு வழித்தடத்தில் தடம் புரண்டதால் மற்ற ரயில் சேவைகளும் பாதிக்கப்படவில்லை என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் பாலசோர் மாவட்டத்தில் நடந்த மூன்று ரயில் விபத்தில் குறைந்தது 292 பேர் உயிரிழந்த நிலையில் 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Another goods train accident in Odisha


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->