தாய் ஃபோனுக்கு மகன் அனுப்பிய மெசேஜ்! அதிர்ச்சியில் காவல் நிலையத்திற்கு சென்ற தாய்! நடந்தது என்ன?
Andhra student commits suicide jumping 35th floor
ஆந்திரா, நெல்லூரைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் ரெட்டி. இவரது மனைவி ஸ்வப்னா ரெட்டி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ராயந்த் ரெட்டி (வயது 14). இவர் ஹைதராபாத் காஜா குடா பகுதியில் உள்ள சர்வதேச பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
2 மகன்களும் ஹைதராபாத்தில் படித்து வருவதால் சுரேஷ்குமார் ரெட்டி தனது குடும்பத்துடன் ஹைதராபாத் கச்சி பவுலி பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் ராயந்த் ரெட்டிக்கு படிப்பில் நாட்டம் இல்லாமல் சரியாக படிக்க முடியவில்லை. இதனால் நேற்று முன்தினம் இரவில் ராயந்த் தனது தாய்க்கு செல்போனில் ''எனக்கு படிப்பில் நாட்டம் இல்லாததால் அவமானமாக உள்ளது. இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்'' என குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் இரவு முழுவதும் மகனை தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராயந்த் ரெட்டியை தேடி வந்தனர். இதனை அடுத்து நேற்று காலை அடுக்குமாடி குடியிருப்பின் ஹெச். பிளாக் பகுதியில் மாணவன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் ராயந்த் 35 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் மாணவனின் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Andhra student commits suicide jumping 35th floor