எரிபொருள் பற்றாக்குறை: எப்-35 போர் விமானம் திருவனந்தபுரத்தில் அவசர தரையிறக்கம்!
Airplane England kerala
இங்கிலாந்தை சேர்ந்த எப்-35 போர் விமானம் நேற்று இரவு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் எரிபொருள் குறைபாட்டால் அவசரமாக தரையிறங்கியது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்குத்தாகவும் குறுகிய தூரத்திலும் இறங்கும் திறனுடைய இந்த விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது எரிபொருள் பஞ்சம் ஏற்பட்டதால், விமானி அனுமதி கேட்டார். அதனை தொடர்ந்து, தரையிறங்க அரசு அனுமதி அளித்தது.
விமானத்துக்கு எரிபொருள் நிரப்ப மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளதாகத் தகவல்.
இதற்கிடையில், அகமதாபாத் – லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம் விபத்தில் 242 பேர் உயிரிழந்ததும் கவலையளிக்கிறது.