சிறுவனின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்ட ஆமதாபாத் விமான விபத்து..! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான விபத்தில் பயணம் செய்த 241 பேர் உள்பட 270 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது. குறித்த விமான விபத்தை 17 வயது சிறுவன் ஒருவன் படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளான். இந்த படம் மற்றும் வீடியோ விசாரணையில் முக்கிய பங்கு வகிக்கிறது. விமானத்தை பார்த்து படம் பிடிப்பதில் ஆர்வம் காட்டிய வந்த குறித்த சிறுவன், விபத்தை பார்த்து பயந்து போன நிலையில் காணப்படுகிறார்.

இந்த விமான விபத்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. விமானத்தில் இருந்த கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. குறித்த விமான விபத்து தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், விபத்து தொடர்பாக பல வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இந்த விமான விபத்தை ஆமதாபாத்தை சேர்ந்த மகன்பாய் அன்சாரியின் மகன் ஆர்யன் (17) தனது மொபைல்போனில் பதிவு செய்த வீடியோ இந்த விசாரணையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

உயர்நிலை பள்ளியில் படிக்கும் இந்த மாணவனின் முக்கிய பொழுது போக்கு, பறந்து செல்லும் விமானத்தை பார்ப்பது மற்றும் அதனை படம் பிடிப்பது என கூறப்படுகிறது. அந்த வகையில் கடந்த 12-ஆம் தேதி தனது வீட்டின் மேல் பறந்து சென்ற விமானத்தை தனது மொபைல்போனில் பதிவு செய்துள்ளார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானதும் அந்த மொபைலில் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக ஆர்யன் கூறுகையில், சொந்த கிராமத்தில் இருக்கும் போது விமானம் பறந்து செல்வதை பார்க்க பிடிக்கும். தந்தை இருக்கும் வீட்டிற்கு வந்தால், விமானத்தை அருகில் பார்க்கலாம் என நம்பி வந்தேன். கடந்த 12-ஆம் தேதி தான் இங்கு வந்தேன். விமானம் அருகே பறந்து சென்றது. இதனை நண்பர்களிடம் காட்ட வேண்டும் என்பதற்காக அதனை வீடியோ பதிவு செய்தேன்.

விமானம் தாழ்வாக பறந்து சென்றதை பார்த்த போது, அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கப் போவதாக நினைத்தேன். ஆனால், கீழே சென்ற உடன் தீப்பிடித்தது. பிறகு வெடித்தது. இதனால் நான் பயந்து போனேன். வீடியோவை எனது சகோதரியிடம் காட்டிய பிறகு விபத்து குறித்து தந்தையிடம் தெரிவித்தேன். என சோகத்துடன் கூறியுள்ளார்.

இவரது தந்தை மகன்பாய் அன்சாரி, ஓய்வு பெற்ற ராணுவ வீரர். தற்போது மெட்ரோ ரயில் திட்டத்தில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் தான், விமான நிலையம் அருகில் இருக்கும் 03 மாடி கொண்ட கட்டடத்தில் குடிபெயர்ந்துள்ளார். தனியாக தங்கி உள்ள அவரது குடும்பத்தினர் குஜராத் - ராஜஸ்தான் எல்லையில் உள்ள கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவரது மகள் போலீஸ் தேர்வு எழுத ஆமதாபாத் வந்த போது, அவருடன் ஆர்யனும், தந்தையிடம் புத்தகம், பேனா, நோட்டுகள் வாங்குவதற்கு வந்துள்ளார்.

இது தொடர்பாக ஆர்யனின் கூறுகையில், கிராமத்தை விட்டு எனது மகன் தற்போது தான் முதல்முறையாக ஆமதாபாத் வந்துள்ளார். இங்கு வருமாறு அழைக்கும் போது எல்லாம் விமானத்தை பார்க்க முடியுமா என கேட்பார். வீட்டின் மாடியில் நின்றால் ஏராளமான விமானத்தை பார்க்கலாம் என நான் கூறி அழைத்து வந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் எங்களிடம் பேட்டி எடுக்க ஏராளமானோர் கோரிக்கை விடுத்து வருவதோடு, தினமும், ஏராளமான பத்திரிகையாளர்கள் எங்களது வீடுகளை சூழ்ந்து கொண்டு பேச சொல்கின்றனர். இதனால் இந்த சம்பவம் தனது மகனின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டதாகவும், இந்த சம்பவத்தால் பயந்து போன மகன் மொபைல்போன் பயன்படுத்துவதையே நிறுத்திவிட்டார் என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ahmedabad plane crash left a big impact on the boy life


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->