10-வது மாடியில் இருந்து குதித்து தனியார் நிறுவன பெண் ஊழியர் தற்கொலை..! போலீசார் விசாரணை...! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் குடியிருப்பின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் அம்ரிதா ஷர்மா (27). இவருக்கு திருமணமான நிலையில் கணவருடன் பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். மேலும் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் அம்ரிதா வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவரது பெற்றோர் லக்னோவில் வசித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தந்தை உயிரிழந்து விட்டார்.

இதையடுத்து தந்தை இறந்த துக்கத்தில் அம்ரிதா, கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் சாப்பிட்டு விட்டு தூங்குவதற்கு சென்ற அம்ரிதா, திடீரென குடியிருப்பின் 10-வது மாடியில் இருந்து குதித்துள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அம்ரிதாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அம்ரித்தா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதில் தந்தை இறந்ததால் மன உளைச்சலில் இருந்த அம்ரிதா 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A woman committed suicide by jumping from the 10th floor in Bangalore


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->