அந்தரங்க பகுதி வழியாக உள்ளே சென்ற பாம்பு.! மகனின் அலப்பறையால் மருத்துவர்கள் புலம்பல்! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசம் மாநிலத்தில் மலம் கழிக்கும் போது அந்தரங்கப் பகுதி வழியாக பாம்பு உள்ளே புகுந்து விட்டதாக  கூறி தனது குடும்பத்தினரையும்  மருத்துவர்களையும் குழப்பத்திற்கு உள்ளாக்கினார் போதை ஆசாமி ஒருவர்.

உத்தர பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தைச் சார்ந்த மகேந்திரன் என்பவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் விழித்து தான் கழிவறை செல்லும் போது தனது வயிற்றுக்குள் பாம்பு புகுந்து விட்டதாகவும் அதனால் தாங்க முடியாத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர் அங்கிருந்த அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  

இவரது வயிற்றை ஸ்கேன் மூலம் சோதனை செய்து பார்த்த மருத்துவர்கள்  அப்படி எதுவும் இல்லை அதிகமாக குடித்ததனால் ஏற்பட்ட வயிற்று வலியாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். ஆனால் இதில் நம்பிக்கை கிடையாது  மகேந்திரனும் அவரது குடும்பத்தினரும் மற்றொரு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அந்த  மருத்துவமனையில் பரிசோதனை செய்த டாக்டர்களும் அதே தகவலையே தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மகேந்திரன் ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மது போதையில்  அந்தரங்கப் பகுதி வழியாக பாம்பு வயிற்றுக்குள் சென்று விட்டது என்று அலப்பறை செய்த  குடிமகனின் நடவடிக்கையால் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a man from up creates chaos in hospital


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->