2½ வயது சிறுமி பாலியல் பலாத்காரம்..தாய்,கள்ளக்காதலன் கைது!
A 21/2year old girl was raped Mother boyfriend arrested
தாயின் கள்ளக்காதலன் 2½ வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தநிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
மும்பையை சேர்ந்த 30 வயது பெண் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு 2½ வயது மகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் அந்த பெண்ணுக்கும், 19 வயது வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.
சம்பவத்தன்று இரவு பெண்ணும், வாலிபரும் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர்.அப்போது அந்த வாலிபர் அந்த பெண்ணின் 2½ வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சிறுமியின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு மகளை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அங்கு டாக்டரிடம் தனது மகளுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாக கூறி ய நிலையில் சிறுமியின் அந்தரங்க உறுப்பில் காயம் இருந்ததால், போலீசுக்கு தகவல் கொடுத்து விட்டு டாக்டர்கள் சிகிச்சையை தொடங்கினர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
இதையடுத்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. சிறுமி பெண்ணின் 19 வயது காதலனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும், அதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
அதனை தொடர்ந்து போலீசார் போக்சோ மற்றும் கொலை உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் தாயையும், அவரது காதலனையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
A 21/2year old girl was raped Mother boyfriend arrested