தமிழகத்தில் 7 -ஆம் தேதி விடுமுறையா? - வெளியானது அதிகார்பூர்வத் தகவல்.!!
tamilnadu government explain tomorrow holiday in tamilnadu
மக்களுக்கு உடனடியாக செய்திகளை கொண்டு சேர்க்கும் விதமாக சமூக வலைத்தளங்கள் உள்ளது. அப்படி வரும் செய்திகளில் ஒரு சில செய்திகள் போலியானவையாக உள்ளது. அதனை மக்கள் உண்மை என்று நம்பும் விதமாக உள்ளது.
அந்த வகையில், மொகரம் பண்டிகையை முன்னிட்டு 7-ந் தேதியான நாளை அரசு விடுமுறை என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பகிரப்பட்டு வருகிறது. இந்தத் தகவல் வதந்தி என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
"கடந்த 26-6-2025 அன்று மொகரம் மாத பிறை காயல்பட்டினத்தில் காணப்பட்டது. ஆகையால் 27-6-2025 தேதி அன்று மொகரம் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. எனவே யொமே ஷஹாதத் ஞாயிற்றுக்கிழமை 6-7-2025 ஆகும்" என்று தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அந்த தினம் அறிவிக்கப்பட்டுள்ளதால் 7-ந் தேதி (திங்கட்கிழமை) அரசு விடுமுறை இல்லை. தவறான தகவலை பரப்பாதீர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
tamilnadu government explain tomorrow holiday in tamilnadu