தேர்தல் கண்காணிப்பு கடுமை…! தூத்துக்குடியில் ரூ.60 லட்சம் ரொக்கம் பறிமுதல்...! - அதிகாரிகள் அதிரடி
Election surveillance tightened 60 lakh cash seized Thoothukudi Officials take action
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு, கண்காணிப்பு நடவடிக்கைகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் தணிக்கைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் விடாமுயற்சியுடன் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் இணைந்து மேற்கொண்ட தீவிர சோதனைகளில், பெருமளவில் பணம் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான விஷூ மகாஜன் வெளியிட்டுள்ள தகவலில் அதிர்ச்சியூட்டும் விவரங்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, இதுவரை நடைபெற்ற சோதனைகளில் மொத்தமாக ரூ.60 லட்சத்து 98 ஆயிரத்து 830 அளவிலான ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ரூ.4 லட்சத்து 8 ஆயிரத்து 449 மதிப்பிலான மதுபானங்களும், ரூ.6 லட்சத்து 80 ஆயிரத்து 640 மதிப்பிலான போதைப்பொருட்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
தேர்தல் நேரத்தில் சட்டவிரோத செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகள், மாவட்டத்தில் தேர்தல் ஒழுங்கை உறுதி செய்யும் வகையில் முக்கிய பங்காற்றி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Election surveillance tightened 60 lakh cash seized Thoothukudi Officials take action