பெற்றோர்களே உஷார்.. செல்போன் சார்ஜரால் பறிபோன 8 மாத குழந்தையின் உயிர்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் செல்போன் சார்ஜரால் 8 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் கார்வார் அருகே சித்தாரா கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் மின் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கு சஞ்சனா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இதில் 8 மாத குழந்தையான சாணித்யா வீட்டில் படுத்து கொண்டு விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு செல்போன் சார்ஜர் ஒயர் தொங்கிக் கொண்டிருந்தது. மேலும் சார்ஜர் சுவிட்ச் பாக்ஸில் சொருகியிருந்தது.

 

இதனால் சார்ஜ்ரில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. அப்போது குழந்தை விளையாட்டுதனத்தில் சார்ஜர் ஒயரை வாயில் வைத்து கடித்துள்ளது. இதில் செல்போன் சார்ஜர் வழியாக குழந்தையின் உடலில் பாய்ந்தது பாய்ந்தது. இதில் மின்சாரம் தாக்கியதில் 8 மாத குழந்தை பரிதாபமாக துடி துடித்து மயங்கியுள்ளது.

 இதனையடுத்து உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 8 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

8 month baby diet for bite charger cable


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->