திடீரென வெடித்த சிலிண்டர் - பரிதாபமாக பறிபோன 2 உயிர்.! - Seithipunal
Seithipunal


திடீரென வெடித்த சிலிண்டர் - பரிதாபமாக பறிபோன 2 உயிர்.!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள, கோலார் மாவட்டம் குப்பதஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கிரிஷ் - நந்தினி தம்பதியினர். இவர்கள் இருவரும் கோலார்அருகே மணிகட்டா சாலையில் மசூதன் என்பவருக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நந்தினி கடந்த 16-ம் தேதி சமையல் செய்யும்போது திடீரென்று கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த கிரிஷ் மற்றும் நந்தினி பலத்த காயம் அடைந்தனர். 

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து தம்பதியை மீட்டு சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இரண்டு பேரும் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் இடத்திற்குச் சென்ற போலீஸார் அங்கு விசாரணை நடத்தினர். 

அதில் காபி போடும் போது, சிலிண்டர் வெடித்து சிதறியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த  தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 peoples died for gas cylindar explossion in karnataga


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->