அவசரமாக விவசாய நிலத்தில் தரையிறங்கிய "பயிற்சி விமானம்"..! 2 விமானிகள் காயம்...! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் பெல்காவி அருகே பயிற்சி விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விவசாய நிலத்தில் தரையிறங்கியதில் இரண்டு விமானிகள் காயமடைந்தனர்.

கர்நாடகா மாநிலம் பெலகாவியில் உள்ள சாம்ப்ரா விமான நிலையத்திலிருந்து ரெட்பேர்ட் ஏவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு இருக்கைகள் கொண்ட பயிற்சி விமானம் சுமார் 9:30 மணியளவில் புறப்பட்டு சென்றது. இதையடுத்து விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஹொன்னிஹால் மற்றும் மாவினகட்டி கிராமங்களுக்கு இடையே விவசாய நிலத்தில் அவசரமாக தரையிறங்கியது.

இதில் விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் சிறு காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அறிந்த விமானப்படை வீரர்கள், உள்ளூர் போலீசார், தீயணைப்பு துறை மற்றும் அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. இதையடுத்து காயமடைந்த இரண்டு பேரும் விமானப்படை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 injured in training aircraft makes emergency landing near Belgavi Karnataka


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->