13 வயது சிறுவன் துண்டு துண்டாக வெட்டி நரபலி.. பெண் சாமியார் உட்பட 6 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலத்தில் 13 வயது சிறுவன் துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் சுபர்ணாபூர் கிராமத்தை சேர்ந்தவர் வசந்தி. இவரது 13 வயது மகன் சஞ்சீவ் பிஸ்வாலுக்கு உடல்நிலை சரியில்லாததால், அந்தப் பகுதியை சேர்ந்த பெண் சாமியார் ரீதாஞ்சலி என்பவரிடம் அழைத்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் அந்த பெண் சாமியார் சிறுவனுக்கே வைத்தியம் பார்க்க வேண்டும் என்று கூறி தாய் மற்றும் மகனை தனித்தனி அறைகளில் தங்க வைத்துள்ளார். இதனையடுத்து பசந்தி மறுநாள் காலை எழுந்து தனது மகனை தேடிய பொழுது சிறுவனை காணவில்லை. அதன் பின்னர் அவர்கள் தங்கி இருந்த இடத்திற்கு வெளியே சிறுவனின் கை, கால்கள் வெட்டப்பட்டு கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு மரத்தில் உடல் தொங்கவிடப்பட்டிருந்தது.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் கத்தி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து உடனடியாக போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் பெண் சாமியார் மற்றும் அவரது மகன்கள் உட்பட ஆறு பேரை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

13 years old boy killed superstition in odisha


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->