கர்நாடகாவில் 15 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்: இரண்டு முறை கூட்டு பலாத்காரம்: 02 பேர் கைது,04 பேர் தலைமறைவு..!
02 arrested for gang-raping a 15 year old girl twice in Karnataka 04 absconding
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை இரண்டு முறை கூட்டு பலாத்காரம் செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளதோடு, தலைமறைவான 04 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக கர்நாடகா போலீசார் கூறியதாவது: கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த சிறுமியை அவரது நண்பர் ஒருவர், ஆசை வார்த்தை கூறி மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று, அங்கு அவருடன்,0 5 நண்பர்கள் சேர்ந்து குறித்த சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன், அதனை அவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளதோடு, அந்த வீடியோவை ஆன்லைனில் வெளியிடப் போவதாக கூறி சிறுமியை மிரட்டியுள்ளனர்.
அதனை தொடர்ந்து, அந்த வீடியோவை காட்டி மிரட்டி மீண்டும் 06 பேர் சேர்ந்து கும்பல் அந்தச்சிறுமியை இரண்டாவது முறையாக கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பின்பும் அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து பயந்து போன அந்தச்சிறுமி போலீசில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் போக்சோ மற்றும் பிஎன்எஸ் ஆகிய சட்டங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார்தலைமறைவான 04 பேரை . போலீசார் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
English Summary
02 arrested for gang-raping a 15 year old girl twice in Karnataka 04 absconding