இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு உலக நாடுகளின் ஆதரவு கிடைத்துள்ளது - கனிமொழி எம்.பி. பேட்டி!
DMK MP Kanimozhi say about Operation Sindoor
இந்தியாவின் “ஆபரேஷன் சிந்துர்” வெற்றிக்குப் பின், பாகிஸ்தான் ஆதரவு வழங்கும் பயங்கரவாதத்தை உலக அளவில் அம்பலப்படுத்தும் நோக்கில், இந்தியா பிற நாடுகளிடம் ஆதரவை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
அதன்படி, மத்திய அரசு ஏழு அனைத்துக் கட்சித் தலைவர்கள் அடங்கிய எம்.பி. குழுக்களை அமைத்தது. இந்த குழுக்களில், திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான குழுவும் இடம் பெற்றது.
மே 21 முதல், இக்குழுக்கள் 33 நாடுகளின் தலைநகரங்களுக்கு பயணம் செய்து, இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கியதும், பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக்கு ஆதரவைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று (ஜூன் 3) சென்னை திரும்பிய கனிமொழி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் தெரிவிக்கையில், "பயங்கரவாதத்தை ஏற்கும் நிலை எந்த நாட்டுக்கும் இல்லை. பல நாடுகள் இதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற கருத்தில் அனைத்தும் ஒருமித்தமான மனப்பான்மையுடன் இருக்கின்றன. பஹல்காமில் நிகழ்ந்த தாக்குதலை அனைத்து நாடுகளும் கண்டித்துள்ளன. இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு அவர்கள் துணைபுரிகின்றனர்” என்றார்.
English Summary
DMK MP Kanimozhi say about Operation Sindoor