தவறு செய்தா தப்ப முடியாது...! கோனியம்மன் கோவிலில் அரங்கேறிய முறைகேடு...? - ஒரே உத்தரவில் தூக்கப்பட்ட 8 பேர் - Seithipunal
Seithipunal


கோவை கோனியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணியின் போது, அங்கிருந்த ஊழியர்கள் ஒரு உண்டியலை திருடி, அதிலிருந்த பணத்தை கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 4 ஊழியர்களும், உண்டியல் திருடப்பட்டதை கண்டறியாமல் கவனக்குறைவாக செயல்பட்டதாகக் தெரிவிக்கப்படும் 4 அதிகாரிகளும் அடையாளம் காணப்பட்டனர்.

இதையடுத்து, கோனியம்மன் கோவிலில் பணியாற்றி வந்த பாலசுப்ரமணியன், சரவணன், பிரதீப் குமார், கிருஷ்ணராஜ் ஆகிய 4 ஊழியர்களும், சம்பவத்தை உரிய முறையில் கண்காணிக்கத் தவறியதாகக் கூறப்படும் ராம்குமார், உதயகுமார், குமார், உஷா நந்தினி ஆகிய 4 அதிகாரிகளும் என மொத்தம் 8 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Koniamman temple 8 people removed single order


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->