கர்ப்பிணி பெண்களே உஷார்.. கர்ப்ப காலத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியவை.!  - Seithipunal
Seithipunal


கர்ப்பிணி பெண்கள் தாங்கள் சாப்பிடும் உணவுகளால் கரு வளர்ச்சியில் பாதிப்பு மற்றும் கருச்சிதைவு உள்ளிட்டவைகளுக்கு ஆளாக கூடும். எனவே, அவர்கள் சாப்பிடுகின்ற உணவுகளில் மிகுந்த கவனம் வேண்டும்.

சில உணவுகளை கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். மேலும், கர்ப்பமாக இருப்பதால் அவர்களுக்கு அதிகப்படியான உணவுகளை கொடுப்பார்கள். கர்ப்ப காலத்தில் உடல் எடையை கவனமாக கண்காணித்து வரவேண்டும்.

இந்த காலகட்டத்தில் எடை அதிகமாகவோ, மிக குறைவாகவோ இருந்து விடக் கூடாது. எனவே, கர்ப்பிணிகள் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. எப்போதும் அரை வயிறு முக்கால் வயிறு தான் சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள் அதையும் செய்யக்கூடாது. அரை வயிற்றுக்கு சாப்பிட்டால் கருச்சிதைவோ, குறை பிரசவமோ ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. 

அதுபோல உங்களுடைய சாதாரண எடையில் இருந்து கர்ப்ப காலத்தில் 10 கிலோ வரை எடை கூடுதலாக இருக்கலாம். அதற்கு மேல் கட்டாயம் இருக்கக் கூடாது கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் அதிகமாக டீ, காப்பி உள்ளிட்ட பானங்களை அருந்துவதால் ரத்த அழுத்தத்தில் தாறுமாறான நிலை ஏற்படலாம். 

மேலும் அதிகப்படியான காரம், எண்ணெய், மசாலா கலந்த செறிஊட்டப்பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது. 

அத்துடன் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பால் பொருட்களை எடுத்துக் கொள்ளக்கூடாது. 

முட்டை உணவுகள் மற்றும் அசைவம் உள்ளிட்டவற்றை பாதி வெந்த நிலையில் சாப்பிட கூடாது. நன்றாக வெந்த பிறகு தான் அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்களை எக்காரணத்தை கொண்டும் தொடவே கூடாது. உடலில் குடைச்சலை ஏற்படுத்தக்கூடிய உருளைக்கிழங்கு, வாழைக்காய் மற்றும் இறால் மீன் உள்ளிட்டவற்றை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

சோடியம் கலந்த ஊறுகாய், அதிக காரம், பப்படம், ஜெல்லி, ஜாம் போன்ற உணவுகளையும் கட்டாயம் தவிர்த்து விட வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pregnant ladies should Follow These Items In that Time


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->