மூட்டுவலி இருப்பவர்கள் காளானை எப்படி பயன்படுத்த வேண்டும்.?!
MUSHROOM USING FOR LEGPAIN
காளான் - மருத்துவ பயன்கள்:
காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.
காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.
இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது. இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.
பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும்.
வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது.
இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது. மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.
காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.
மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.
தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோயயை குணப்படுத்த பயன்படுகிறது.
100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது. எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது.
மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.
காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.
காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.
காளான்கள் சத்துமிகுந்ததாக இருப்பினும், சாலையோரக் கடைகளில் உண்பதைத் தவிர்த்துவிடுவதே நல்லது. ஏனெனில், சாலை ஓரக் கடைகளில் குறைந்த விலையில் கிடைக்கும், தரமற்ற காளான்களைப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
தரமான காளான்களை வீட்டில் வாங்கி சமைப்பது நல்லது. எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். காளான்களில் புரதச்சத்து மிகுதியாக உள்ளது. சூரிய ஒளியில் இருந்து மட்டுமே அதிகமாக கிடைக்கக்கூடிய வைட்டமின் டி, பி சத்துக்கள் மற்றும் செலினியம் எனும் தாதுப் பொருளும் இதில் உள்ளன. ஆன்டி ஆக்ஸிடன்டாகவும் செயல்படுகிறது. மேலும், இதில் உள்ள ஆன்டி-கார்சினோஜெனிக் (Anti-carcinogenic), கேன்சர் வராமல் தடுக்கும் காரணி. இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதில் கொழுப்புச் சத்து மிகக் குறைவு.
காளான்கள் வாங்கும்போது பார்த்து வாங்க வேண்டும். சில வகை காளான்கள் விஷத்தன்மை கொண்டவையாக இருக்கும். இவற்றை சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறு, சுவாசப் பிரச்னை, வாந்தி, பேதி போன்றவை ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகூட ஏற்படலாம். சில வகை காளான்கள் (Inocybe species) உயிருக்கே ஆபத்தாகும் வாய்ப்புள்ளது. தரமான காளான்கள் வாங்கினால், அவை நிச்சயம் ஆரோக்கியத்தைக் கூட்டும்.
English Summary
MUSHROOM USING FOR LEGPAIN