கீழாநெல்லியின் மருத்துவ குணங்கள் என்ன?.. எந்த முறையில் சாப்பிடலாம்.!
keezhanelli medical usage in tamil
மூலிகைகீரையாக இருக்கும் கீழாநெல்லி, எந்த விதமான பராமரிப்பு இல்லாமலும் வளரக்கூடியவை. மருத்துவகுணம் கொண்ட கொண்ட கீழாநெல்லி, இந்திய வெப்பமண்டல பகுதிகளில் அதிகளவு வளர கூடியவை.
இக்கீரையின் இலையின் அடிப்பகுதியில் வளரும் கீழாநெல்லிக்கு கீழ்வாய் நெல்லி மற்றும் கீட்டா நெல்லி என்ற பெயரும் உள்ளது. கீழாநெல்லி மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பெரும்பாலான ஆய்வுக்கூடங்களில் கீழாநெல்லி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கீழாநெல்லி இலைகளை பறித்து, அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் மோர் கலந்துகுடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். கல்லீரல் பிரச்சனை சரியாகும்.
கீழாநெல்லி செடியை காயவைத்து பொடியாக்கி மூன்று வேளை உணவுக்கு முன்னர் எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோயானது கட்டுக்குள் வரும். கீழாநெல்லி வேரினை அரைத்து பாலுடன் சேர்த்து குடித்து வந்தால் உடல் குளிர்ச்சியாகும். தொற்றுநோய்கள் ஏற்படாது. தலைவலி சரியாகும்.
English Summary
keezhanelli medical usage in tamil