தெற்கில் இருந்தும் ஒரு திமுக எம்.எல்.ஏ பாஜக பக்கம் தாவுகிறார்!? உன்னிப்பாக கவனிக்கும் தலைமை !
Expect One more DMK mla will join BJP
திமுகவில் மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்ற காரணத்துக்காக அதிருப்தியிலிருந்த ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வம் பாரதிய ஜனதா கட்சியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியானது.
டெல்லி சென்ற அவர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசினார். தன்னுடைய தொகுதி மேம்பாட்டுக்காக சந்திக்க வந்ததாக தெரிவித்த அவர், பாஜகவில் இணையவில்லை எனவும் கூறினார்.
அவர் தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் அவர் பாஜகவில் இணைந்தால் அவருடைய பதவி பறி போகும் என்பதால் அவர் பாஜகவில் இணைய வில்லை என அறிவித்து இருந்ததாக கூறப்பட்டது.
திராவிட முன்னேற்ற கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து திமுக தலைமை இன்று அறிக்கை வெளியிட்டது.
இந்த சமயத்தில், சென்னையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ கு.க.செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். " திராவிட முன்னேற்ற கழகத்தில் வாரிசு அரசியல் என்பது, குடும்ப அரசியலாக மாறி இருக்கிறது. மறைந்த அண்ணன் ஜெ.அன்பழகன் வகித்து வந்த பொறுப்பை நான் கேட்டேன் " என்று கூறினார்.
இதன்பின்னர் பேட்டியளித்த பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி. துரைசாமி, " தி.மு.க கட்சியில் இருக்கும் அதிருப்தியாளர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் உப்புக்கு பெயர்போன மாவட்டத்தில் உள்ள எம் எல் ஏ அண்மையில் தலைமையின் கண்டிப்புக்கு ஆளானார். அவர் நியமித்தவர்களை நீக்கிவிட்டு தலைமை வேறு நபர்களை மாவட்ட பொறுப்புகளில் நியமித்தது. இதன்காரணமாக அதிருப்தியில் இருக்கும் அவர் பாஜக பக்கம் சாய்வதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவரது நடவடிக்கைகளை திமுக தலைமை உன்னிப்பாக கவனித்து வருகிறது.
English Summary
Expect One more DMK mla will join BJP