3 நாட்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை.! புதுச்சேரி அரசு அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


வங்க கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்று உள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுவை கடலோர மாவட்டங்களுக்கு கனமழை பெய்து வருகிறது. இன்று மதியம் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

புயல் கரையை கடக்கும் போது 145 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் அதிதீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நிவர் புயலை எதிர்கொள்ள, மீட்பு படையினர் மற்றும் காவல்துறையினர் தயார் நிலையில் உள்ளனர். மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், நிவர் புயல் எதிரொலியாக புதுச்சேரியில் நாளை (26/11/2020) முதல் நவ.28 வரை 3 நாட்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 days school leave in puducherry


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->