மறக்க முடியாத நடிகை சொர்ணாக்காவின் மரணம்...! தமிழில் ஒரு வாய்ப்பிலே உச்சிக்கு போனார், ஆனால் தெலுங்கில் இன்றும் மாஸ் தான்..
சொர்ணாக்காவின் மரணம்
தமிழ்நாட்டில் சொர்ணாக்கா என்று அறியப்படும் இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார்.இவரது உண்மையான பெயர் சங்குந்தலா..
இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தில் பிறந்த இவர் 1981 ஆம் ஆண்டில் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
90 க்கும் மேற்பட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை, வில்லி பாத்திரங்களில் நடித்துள்ளார்.
2003-இல் வெளியான ஒக்கடு என்ற தெலுங்குப் படம் இவருக்குப் புகழ் பெற்றுத்தந்தது.அதன் பிறகு தூள் படத்தில் சொர்ணாக்கா என்ற கேரக்டர் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்..

பெண்கள் கொஞ்சம் கராராக இருந்தாலே போதும், சொர்ணாக்கா என்ற பட்டபெயர் வைக்கும் அளவிற்கு அந்த கேரக்டர் பேசப்பட்டது.,.
ஏன் இன்றும் பலருக்கு சொர்ணாக்கா என்ற கேரக்டர் மறக்காது..தமிழ் மற்றும் தெலுங்கில் கிட்டதட்ட 90 படங்கள் நடித்துள்ளார்..
ஐதராபாதில் கொம்பள்ளி பகுதியில் வசித்து வந்த இவர் 2014 இல் அதிகாலை 2.15 மணிக்கு மாரடைப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்..
பின் சிகிச்சை பலனின்றி காலமானார்..

English Summary
thul movie sornakka death