7 ஆண்டுகளுக்கு பின் எஸ்.ஜே.சூர்யா எடுத்த முடிவு.! உற்சாகமடைந்த ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


வாலி திரைப்படத்தை இயக்கியதால் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் அவர் நிறைய படங்களை இயக்கினார். பின்னர் தானே படங்களில் நடிக்கவும் ஆரம்பித்தார். தற்போது எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். 

தெலுங்கு படங்கள் பலவற்றிலும் அவர் படுபிசியாக நடித்து வருகின்றார். இயக்குனராக எஸ்.ஜே. சூர்யா நிறைய வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் கூட அவர் நடிகரான பின்னர்தான் அவரை பலருக்கும் தெரியும். அதிலும் வில்லன் நடிகராக எஸ்.ஜே. சூர்யா மிரட்டும் தொணியில் நடிப்பது பலருக்கும் சுவாரசியமாக இருக்கும். 

நகைச்சுவை கலந்த வில்லனாக எஸ்.ஜே.சூர்யா இருப்பதால் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்நிலையில், தற்போது அவர் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்க இருக்கிறார். 2015இல் கடைசியாக இசை திரைப்படத்தை அவர் இயக்கினார். 

அதன் பின்னர் இதுவரை படம் இயக்கும் வேலைகளை விடுத்து நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.தற்பொழுது அவர் ஏழு ஆண்டுகளுக்குப் பின் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sj Surya Again Direct new Movie


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->