'நயன் கொஞ்சம் டெரர் தான்' முன்னணி நடிகையை அலறவிட்ட சம்பவம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருந்து வரும் இவர் தற்போது இயக்குனர் அட்லி ஹிந்தியில் இயக்கிக் கொண்டிருக்கும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த வருடம் ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஷாருக்கான் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். இந்த தம்பதியினர் வாடகை தாய்முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்று எடுத்தனர்.

இந்நிலையில் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் போது நிகழ்ந்த ஒரு சம்பவத்தை  இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவி சுஹாசினி விக்னேஷ்  சிவனிடம்  பகிர்ந்திருக்கிறார். விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் ராதிகா உள்ளிட்டோர் நடித்திருந்த படம் நானும் ரவுடிதான் அந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். அந்தத் திரைப்படத்தில் தான் நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனிற்குகும் காதல் மலர்ந்தது.

அந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் அம்மாவாக நடித்திருந்தார் ராதிகா. ஒருமுறை படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது  சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து நயன்தாரா சைலன்ஸ் என மிகவும் சத்தமாக கத்தி விட்டாராம். அதைக் கேட்டு ராதிகாவே அரண்டு போயிருக்கிறார். ஒருமுறை சுஹாசினியை சந்தித்தபோது இந்த சம்பவத்தை அவர் நினைவு கூர்ந்து உள்ளார். அதனை தற்போது விக்னேஷ் சிவனிடம் கேட்டிருக்கிறார் சுகாசினி. விக்னேஷ் சிவனும் நயன்தாரா கொஞ்சம் டெரர்  தான் என பதில் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nayanthara shocked the veteran actress in shooting released after eight years


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->