தயாரா இருங்க மக்களே.. திரௌபதி படம் ரிலீஸ் குறித்து அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர் மோகன் ஜி..!! - Seithipunal
Seithipunal


ழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் இயக்கத்தில் தயாரிப்பாளர் இல்லாத கிரவுட் ஃபண்டிங் என்ற முறையில் உருவாக்கப்பட்டுள்ள படம்தான் திரௌபதி. இந்த படமானது சமூகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் நாடக காதல் குறித்து மிகவும் எதார்த்தமான கதையுடன் களம் இறங்குகிறது திரௌபதி. இந்தப்படத்தின் ட்ரைலர் ஜனவரி 3 இல் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட ஐந்து மணி நேரங்களில் தமிழகம் முழுவதும் சர்ச்சையை கிளப்பியது.

இளைஞர்களை சுயலாபத்திற்காக மூளைச்சலவை செய்து பெண்களுக்கு எதிராக நாடக காதல் நிகழ்த்த செய்கின்றனர் என்று கூறுவதை காண இயலும். முழு படம் வெளியானால் மட்டும்தான் இந்த படம் குறித்த சர்ச்சைகளுக்கும், விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க இயலும்.இந்நிலையில், பல்வேறு தரப்பினரும் படத்தின் மீது வழக்கு தொடுப்பதாகவும், படக்குழுவினருக்கு மறைமுகமாக மிரட்டல் விடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றது.

Image result for drowpathy seithipunal

காதல் என்ற பெயரில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மற்றும் வசதி வாய்ந்த பெண்களிடம் ஆசையாக பேசி அவர்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி வீட்டை விட்டு அழைத்து சென்று அதன் பிறகு, அவர்களது பெற்றோர்களிடம் உங்கள் பொண்ணு எங்க கிட்ட தான் இருக்கு, பணம் கொடுத்துவிட்டு கூட்டிக்கொண்டு போ.. என்று மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை பற்றி பலருக்கும் தெரியப்போவதில்லை. பெண்ணை அழைத்து வந்தது போல அப்படியே கொடுத்தால் ஒரு தொகை, கர்ப்பமாக்கி கொடுத்தால் ஒரு தொகை என்று இந்த கும்பலின் அட்டூழியத்திற்கு அளவில்லாமல் செல்கிறது. 

இது குறித்து அந்த பெண்ணின் பெற்றோர்கள் போலீஸிடம் தெரிவிக்கலாம் என்று பார்த்தால், அந்த பெண்ணோ நான் விரும்பி தான் இவன் கூட வந்தேன் என்று சொல்லும். அந்த அளவுக்கு அந்த பெண்ணை மூளைச்சலவை செய்திருப்பார்கள்.

அப்படி அந்த பெண்ணின் பெற்றோர்கள் பணம் கொடுக்க மறுத்து, போலீஸ் , கோர்ட் என்று சென்றால், அந்த பெண்ணை கொலை செய்து விட்டு அந்த பழியை அவரது பெற்றோர் மீது போட்டு ஆணவ கொலை செய்துவிட்டார்கள் என்று திருப்பி விடும் சம்பவங்களும் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இதை பற்றியெல்லாம் தெரியாத பெண்கள் ஆசை வார்த்தையில் மயங்கி, மதிகெட்டு அவர்கள் பின் சென்று சீரழிந்து வருகிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது அந்த பெண்ணும், பெண்ணின் பெற்றோர்களும் தான். 

Image result for drowpathy seithipunal

இதை பற்றி வெளியே சொன்னால் குடும்பம் மானம் பறி போய்விடும் என்று குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் இருக்கிறது. இப்படியெல்லாம் நடக்குமா.? என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் இது தான் அப்பட்டமான உண்மை. 

இதையெல்லாம் பெண்களுக்கும், பெண்ணை பெற்றவர்களுக்கும் தோலுரித்து காட்டும் வகையில் உருவான படம் தான் திரௌபதி என்று தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் ட்ரைலர் வெளியான அடுத்த நொடியில் இருந்தே பற்றி எரிய தொடங்கி விட்டது. இது குறித்து பல தரப்பில் இருந்து பல விமர்சனங்கள் வந்து கொண்டு தான் உள்ளது. 

இந்த படம் எப்போது வெளிவரும் எப்போது ரிலீசாகும் என்று பலரும் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் இயக்குனர் மோகன்ஜி அவர்களிடம் ரசிகர்கள் பலரும் படம் ரிலீஸ் குறித்த கேள்விகளை தொடர்ந்து எழுப்பிய வண்ணம் இருந்தனர். தற்போது படத்தின் இயக்குநர் மோகன் ஜி எப்போது படம் ரிலீஸ் ஆகும் என்பதை தெரிவித்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் இம்மாதம் உறுதியாக திரௌபதி படம் வெளிவர இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் இதனை கொண்டாடி வருகின்றனர். மேலும், விரைவில் படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

drowpathy release officially announced


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->