உடலுறவின் போது எதையுமே பயன்படுத்தாமல் கரு உண்டாவதை தவிர்க்கும் முறை..!! : மனக்கட்டுப்பாடு உள்ளவர்கள் மட்டுமே இதில் வெற்றி பெறலாம்..!! - Seithipunal
Seithipunal

உடலுறவு வைத்துக்கொள்ளும்போது விந்து வெளியேறுவதற்கு சற்று முன்னதாக ஆண்குறியை பெண்ணுறுப்பில் இருந்து வெளியே எடுத்துவிடுவதன் மூலமாக பெண்கள் கருத்தரித்தலைத் தடுக்கலாம். பெண்குறியில் விந்தணு வழிந்து கருவுறாமல் தடுப்பதே இதன் நோக்கம். இது உலகம் முழுவதும் பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட பழைய கருத்தடை முறைகளில் ஒன்று. இதில் பல நன்மைகள் கூட உள்ளது. அவற்றுள் சில: செலவாகாது, எளிதானது கூட. மருந்துகள் தேவையல்ல, கருத்தடை சாதனங்கள் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை, முன்பே திட்டமிட வேண்டிய அவசியமில்லை, அவசர காலத்தில் இந்த முறையை பயன்படுத்தலாம். பக்கவிளைவுகள் இல்லை, அணைத்து மதங்களும் இம்முறையை ஏற்கின்றன பிற கருத்தடை முறைகளைப் பயன்படுத்த விரும்பாதவர்கள், இந்த முறையை முயற்சி செய்யலாம். இந்த முறையில் உள்ள குறைபாடுகள் என்ன? உடலுறவின் போது பரவசநிலை ஏற்படும் நேரத்தில், ஆணுறுப்பை, பெண்ணுறுப்பிற்கு வெளியே எடுப்பதற்கு மிகுந்த சுயக்கட்டுப்பாடு தேவை. ஏனென்றால், புணர்ச்சிப் பரவசநிலையின்போது ஆண்குறியை இன்னும் உள்ளே நுழைத்து விந்தை வெளியேற்றுவதற்கான உந்துதல் இயற்கையாக அதிகாரிக்கு என்பதால் அதை யாரும் விரும்புவதில்லை. விந்து வெளியேறுவதற்கு முன்னால் உணர்ச்சி தூண்டுதலின் காரணமாக ஆண்குறியில் இருந்து வரும் திரவங்களில் இருக்க கூடிய விந்தணுக்களால் கருவுறவும் வாய்ப்புள்ளது. உடலுறவு முடித்துவிட்டு மீதும் உறவில் ஈடுபடும் சமயத்தில் சமீபத்தில் விந்து வெளியேறியிருப்பதால், ஆண்குறியில் இருந்து வெளியேறும் திரவங்களில் விந்தணுக்கள் இருக்க அதிக வாய்ப்புள்ளது. போதுமான நேரத்திற்கு முன்னரே ஆண்குறியை வெளியே எடுக்கத் தவறுவதால் விந்தணுக்கள், பெண்ணுறுப்புக்குள் செல்வதே பெரும்பாலும் எதிர்பாராத கருவருத்தலுக்கு காரணமாகிறது. விந்து வெளியேறப்போகும் சமயத்தில் ஆண்குறியை, பெண்ணுறுப்பில் உடனடியாக வெளியில் எடுத்து, சற்று தள்ளி வைத்திருக்க வேண்டும். ஆகவே, புணர்ச்சியின் போது விந்து வெளியேறுவதற்கு போதுமான நேரத்திற்கு முன்னரே ஆண்குறியை வெளியே எடுத்துவிட வேண்டியது முக்கியம். ஏனெனில் பெண்ணுறுப்பின் வெளி இதழ்களில் விந்து ஒழுகியதால் கூட சிலர் கருவுற்றுள்ளனர். சரியான நேரத்தில் ஆண்குறியை வெளியே எடுப்பதற்கு, ஆண்களுக்கு புணர்ச்சியின் போது உச்சத்தை எட்டும் சமயத்தில் விந்து ஒரே சமயத்தில் மொத்தமாக வெளியேறவேண்டும். ஆனால், சில ஆண்களுக்கு இரண்டு மூன்று தடவை திரும்பத் திரும்ப வெளியேறும். அதுமட்டுமல்லாது, களைப்பு அல்லது ஆல்கஹால் பாதிப்பால் விந்து வரப்போகிறது என்பதை கூட உணர முடியாமல் இருக்கலாம். இப்படி விந்து வெளியேற்றத்திற்கு முன்னதாக ஆண்குறியை வெளியே எடுக்கும் முறையைப் பின்பற்றுவதால், பால்வினை நோய்கள் ஏற்படுவதை தடுக்க முடியாது. இந்த முறையைப் பின்பற்றும் சில தம்பதிகள் புணர்ச்சிப் உச்சத்தை எட்டும்போதும், விந்து வெளியேற்றத்தின்போது கிடைக்கும் இன்பத்தால் ஆண்குறியை வெளியே எடுப்பதில்லை. சில ஆண்களுக்கு, ஆண்குறியை பெண்ணுறுப்பில் இருந்து வெளியே எடுக்க வேண்டிய மன அழுத்தத்தால் ஆண்மை குறைவு அல்லது சீக்கிரமே விந்து வெளியேறுதல் போன்ற விளைவுகள் ஏற்படலாம். பெண்களுக்கும், மீண்டும் மீண்டும் பாலியல் கிளர்ச்சி ஏற்பட்டு கடைசியில் உச்ச நிலையை அடையாமல் உடலுறவு தோல்வியில் முடிவது உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இந்த முறையை எப்படி சிறப்பாகப் பயன்படுத்திப் பழகுவது? எப்போது ஆண்குறியை பெண்ணுறுப்பில் இருந்து வெளியே எடுக்க வேண்டும் என்பதைத் துல்லியமாக திட்டமிடவேண்டும். ஆண் தனக்கு விந்து வெளியேறப்போகிறது என்பதை உணர்த்த உடனேயே ஆணுறுப்பை பெண்ணுறுப்பில் இருந்து சட்டென வெளியில் எடுத்து பெண்ணுறுப்பின் வெளி இதழ் பகுதிக்கு தொலைவில் விந்தை வெளியேற்ற வேண்டும். ஒரு முறை உடலுறவு வைத்துக்கொண்ட பிறகு கொஞ்ச நேர இடைவெளியில் மீண்டும் உடலுறவு வைத்துக்கொள்ள நினைத்தால், ஆண் சிறுநீர் கழித்துவிட்டு ஆண்குறியின் முனையை கழுவிவிட வேண்டும். இதன் மூலம் இதற்கு முன்பு வெளிவந்த விந்து ஆணுறுப்பின் மேல் இருந்தால் அதை நீக்கிவிடலாம்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S



கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->