போர் பதற்றம் உச்சம்: அமெரிக்கர்களுக்கு உலகளாவிய எச்சரிக்கை!
War Tension Peaks A Global Warning for Americans
மத்திய கிழக்கு மோதல் தொடர்பாக அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை 'உலகளாவிய எச்சரிக்கை' விடுத்துள்ளது.
ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் இது என இஸ்ரேல் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் ஈரானின் வான் பாதுகாப்பு மற்றும் தாக்குதல் ஏவுகணை திறன்களை கணிசமாக குறைத்து, அதன் அணுசக்தி செறிவூட்டல் வசதிகளை சேதப்படுத்தியது. இஸ்ரேலின் இந்த அதிரடிக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் இஸ்ரேலை திக்குமுக்காடச்செய்து வருகிறது.கடந்த 11 நாட்களாக நடந்து வரும் இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றம் நீடித்து வருகிறது.இதனால், இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் இறங்கியுள்ளது.
ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்தநிலையில் அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக ஈரான் அணுசக்தி கழகம் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மத்திய கிழக்கு மோதல் தொடர்பாக அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை 'உலகளாவிய எச்சரிக்கை' விடுத்துள்ளது.அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலால் மத்திய கிழக்கு முழுவதும் பயணங்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள அமெரிக்க குடிமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அறிவுறுத்துகிறது. பயணத்தைத் திட்டமிடும்போது எங்கள் பயண ஆலோசனை, நாட்டுத் தகவல் மற்றும் சமீபத்திய பாதுகாப்பு எச்சரிக்கைகளை கவனமாகப் படிக்கவும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
War Tension Peaks A Global Warning for Americans