நிலச்சரிவால் கிராமங்கள் விழுங்கப்பட்டது...! 18 பேர் பலி, டஜன் கணக்கில் மக்கள் மண்ணில் புதைவு...!
Villages swallowed by landslides 18 people killed dozens buried ground
இந்தோனேஷியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், பல பகுதிகள் கண நேரத்தில் வெள்ளத்தில் மூழ்கின. மழை வேகத்துக்கு இணையாக நிலச்சரிவுகளும் வெடித்து, வீடுகள் பல மண்ணின் கீழ் புதைந்து போனன. இந்த பேரிடரில் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது அதிகாரப்பூர்வ தகவல்.

பேரிடர் தணிப்பு கழகம் வெளியிட்ட அறிக்கையின் படி, சிலாகேப் நகரம் அருகிலுள்ள சீபியுனிங் கிராமத்தில் நிலச்சரிவு கனமழையால் பெரும் பேரழிவை ஏற்படுத்தியது. 10 முதல் 25 அடி ஆழம் வரை மக்கள் புதைந்து போனதால் மீட்புப் பணியில் பெரிய சவால்கள் ஏற்பட்டுள்ளன.
சிலாகேப் பகுதியில் மட்டும் 16 பேரின் உயிர் பலியானது, மேலும் 7 பேர் காணாமல் போயுள்ளனர் என தேடுதல் மற்றும் மீட்பு குழுத் தலைவர் அப்துல்லா தெரிவித்தார்.
இதனுடன், மத்திய ஜாவாவின் பஞ்சார்நிகரா பகுதியில் ஏற்பட்ட மற்றொரு நிலச்சரிவில் 2 பேர் பலியாக, 27 பேர் காணாமல் போனனர். இங்கு 30-க்கும் மேற்பட்ட வீடுகளும் விவசாய நிலங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.
மேகமூட்டத்திற்கும் சகதியான நிலத்திற்கும் மத்தியில், மீட்புக் குழுக்கள் இடைவிடாத முயற்சியில் தேடுதல் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
English Summary
Villages swallowed by landslides 18 people killed dozens buried ground