உக்ரைனுக்கு மேலும் 3 பில்லியன் டாலர் மதிப்புலான ராணுவ உதவி - அமெரிக்கா அதிபர் அறிவிப்பு - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றது.

இந்நிலையில் உக்ரைனுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு மேலும் 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புலான ராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அதிபர் அறிவித்துள்ளார்.

இதில் வான் பாதுகாப்பு அமைப்புகள் அதிநவீன பீரங்கிகள், டிரோன்கள் மற்றும் பிற ராணுவ தளவாடங்கள் உள்ளடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆகஸ்ட் 24ஆம் தேதி 33வது சுதந்திர தினத்தை கொண்டாடிய உக்கரையனுக்கு வாழ்த்து தெரிவித்த அதிபர் ஜோபைடன், உக்ரைன் மக்கள் தங்கள் இறையாண்மையை பாதுகாப்பதற்காக போராட்டத்தை தொடரும்போது அவர்களுக்கு துணையாக நின்று அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

US president announced that it will provide 3 billion in military aid to Ukraine


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->