உக்ரைனுக்கு மேலும் 3 பில்லியன் டாலர் மதிப்புலான ராணுவ உதவி - அமெரிக்கா அதிபர் அறிவிப்பு
US president announced that it will provide 3 billion in military aid to Ukraine
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றது.
இந்நிலையில் உக்ரைனுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு மேலும் 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புலான ராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அதிபர் அறிவித்துள்ளார்.
இதில் வான் பாதுகாப்பு அமைப்புகள் அதிநவீன பீரங்கிகள், டிரோன்கள் மற்றும் பிற ராணுவ தளவாடங்கள் உள்ளடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆகஸ்ட் 24ஆம் தேதி 33வது சுதந்திர தினத்தை கொண்டாடிய உக்கரையனுக்கு வாழ்த்து தெரிவித்த அதிபர் ஜோபைடன், உக்ரைன் மக்கள் தங்கள் இறையாண்மையை பாதுகாப்பதற்காக போராட்டத்தை தொடரும்போது அவர்களுக்கு துணையாக நின்று அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
US president announced that it will provide 3 billion in military aid to Ukraine