"மத்திய கிழக்கில் போர்த் தீ": மிக நீண்ட கால போருக்கு தயாரா இருங்க! அமெரிக்கர்களுக்கு வெளியேற உத்தரவு! - Seithipunal
Seithipunal


ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய அதிரடி வான்வழித் தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் காமேனி உட்பட 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் மத்திய கிழக்கு பிராந்தியம் போர்க்களமாக மாறியுள்ளது.

ஈரானின் பதிலடியும் எச்சரிக்கையும்:
தனது தலைவரின் மரணத்திற்குப் பழிவாங்க, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் தூதரகங்கள் மீது ஈரான் நேற்று முதல் உக்கிரமான தாக்குதல்களைத் தொடங்கி உள்ளது.

நீண்ட காலப் போர்: "நாங்கள் ஒரு நீண்ட காலப் போருக்குத் தயாராகிவிட்டோம். ஆரம்பத்திலேயே எங்களது பலமான ஆயுதங்களைப் பயன்படுத்துவது முட்டாள்தனம். எதிரிகளிடம் குறிப்பிட்ட அளவே ஆயுதங்கள் உள்ளன என்பது உலகிற்குத் தெரியும்" என ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.

அமெரிக்க குடிமக்களுக்கு அவசர எச்சரிக்கை:
சூழல் மோசமடைவதைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு எமிரேட்சில் (UAE) உள்ள தனது நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அவசர அறிவுறுத்தலை வழங்கியுள்ளது:

வெளியேற உத்தரவு: "யுஏஇ-யில் உள்ள அமெரிக்கர்கள் ஓமன் மற்றும் சவுதி அரேபியாவுடனான நில எல்லைகள் வழியாகவோ அல்லது தற்போது புறப்படும் சில விமானங்கள் மூலமாகவோ உடனடியாக வெளியேறுவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைக்கு நில எல்லைகள் திறந்திருப்பதாகவும், வெளியேற முடியாதவர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுமாறும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

US Israel Strikes Kill Khamenei Iran Vows Long War US Issues Evacuation Alert


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->