முதலமைச்சரின் 'தூக்கத்தை' கலைத்த விஜய்! "ஜனநாயகன்" படத்திற்காக குரல் கொடுத்தற்கும் நன்றி! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூரில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய நடிகர் விஜய், தனது திரைப்படமான 'ஜனநாயகன்' ரிலீஸ் விவகாரத்தில் நிலவிய சிக்கல்களுக்குக் குரல் கொடுத்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குத் தனது பாணியில் நன்றியையும், விமர்சனத்தையும் முன்வைத்தார்.

விஜய்யின் 'நன்றி' கலந்த கிண்டல்:
"ஜனநாயகன் விவகாரத்தில் பட்டும் படாமல் குரல் கொடுத்த முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள். ஆனால், நான் இப்படி வெளிப்படையாகப் பேசுவதால் சி.எம். சாரின் மனநிலை இப்போது எப்படி இருக்கும் தெரியுமா?" எனக் கேள்வி எழுப்பி, கீழ்க்கண்டவாறு கிண்டல் செய்தார்:

தூக்கமில்லா இரவுகள்: "கட்சிக்காரர்கள் தொல்லை ஒருபுறம், இந்த விஜய் வந்து கேள்வி கேட்டுத் தூங்கவிடாமல் செய்கிறானே என அவர் வருத்தப்படுவார். நிம்மதியாக நெடுஞ்சாலையில் 'சோலோ'வாகச் சைக்கிள் ஓட்டலாம் என்று நினைத்தால், அங்கும் மக்கள் சக்தியுடன் வந்து நாம் மறிக்கிறோம்".

பண அரசியல்: ₹1000 கொடுத்து மக்களைச் சமாளிக்க நினைத்தால், அதை ₹5000-ஆக உயர்த்தி ஏமாற்றப் பார்ப்பதை மக்கள் கேள்வி கேட்கும்படி நாம் மாற்றிவிட்டோம். கூட்டணி கட்சிகளின் அழுத்தத்தாலும் அவர் திணறி வருகிறார்.

வீட்டுக்கு ஒரு விஜய்!
"சி.எம். சார்... நீங்கள் இந்த விஜய்யை (என்னை) முடக்கலாம். ஆனால், தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் 'விஜய்'களாகவும் 'விஜி'களாகவும் மக்கள் மாறிவிட்டார்கள். அவர்களை உங்களால் முடக்க முடியாது. அவர்கள் குடும்பம் குடும்பமாகப் பிரசாரத்தில் இறங்கும்போது, யாராலும் தடுக்க முடியாத மாற்றத்தை நீங்கள் காண்பீர்கள்." என விஜய் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay Thanks CM Stalin for Janayagan Support Challenges Him with People Power


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->