உக்ரைனில் பொதுமக்கள் தஞ்சம் புகுந்திருந்த திரையரங்கம் மீது ரஷ்யா குண்டு வீசி தாக்குதல்.!
Ukraine Russia war
உக்ரைனில் பொதுமக்கள் தஞ்சம் புகுந்திருந்த திரையரங்கம் மீது ரஷ்யா குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இதில் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். 20 லட்சத்திற்கு அதிகமானோர் வெளிநாடுகளுக்கு அகதிகளாகவும் சென்றுள்ளனர்.
இந்நிலையில் உக்ரைனில் பொதுமக்கள் தஞ்சம் புகுந்திருந்த திரையரங்கம் மீது ரஷ்யா குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் குழந்தைகள் உட்பட 300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.