அமெரிக்கா : கான்ரோவை கதிகலங்க வைத்த சூறாவளி புயல் - இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா : கான்ரோவை கதிகலங்க வைத்த சூறாவளி புயல் - இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலி.!

அமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தின் கான்ரோ பகுதியில் நேற்று கடும் சூறாவளி புயல் வீசியது. அதுமட்டுமல்லாமல், இடி, மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி மழை கொட்டியது.

இதனால், நகரின் பல வீடுகளுக்குள் நீர் புகுந்தது. நகரம் முழுவதும் தண்ணீரால் வெள்ளக்காடாக காட்சியளித்தது. இந்த நிலையில், மழையின் தாக்கம் தாங்கமுடியாமல் புதிய கட்டுமானத்தில் இருந்த வீடு ஒன்று சரிந்து விழுந்து தரைமட்டமானது. 

அதில், கட்டுமான பணியில் ஈடுபட்டவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டு குத்தியுள்ளார். இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன் படி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்தது தெரிந்தது.

மேலும், மீட்புப்படையினர் 7 பேரை உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த பலத்த சூறாவளி புயலால் வீடுகளை இழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்னர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two peoples died seven peoples injured for storm in america texas


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->