சுனாமி எச்சரிக்கை! கிரீஸ் நாட்டில் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவான நிலநடுக்கம்...! - Seithipunal
Seithipunal


கிரீஸ் நாட்டில், இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது இந்திய நேரப்படி காலை 8.49 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை, தேசிய நில அதிர்வு மையம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானதாக தெரிவித்துள்ளது.

மேலும், இது 104 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், 35.96°வடக்கு அட்சரேகையிலும், 25.79° கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

மேலும்,  இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த சூழலில், கிரீசில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து அந்நாட்டுக்கு ''சுனாமி எச்சரிக்கை'' விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tsunami warning Earthquake measuring 6 Richter scale hits Greece


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->