இன்னும் 90 நாட்கள் கூடுதல் அவகாசம் அளித்த டிரம்ப்...!
Trump gives 90 more days
கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா, சீனா இரு நாடுகளிடையே நடைபெறும் வர்த்தக போர் தற்போது தீவிரமடைந்து வருகிறது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு சீனா நாடு அதிக வரி விதித்து வருகிறது என குற்றம் சாட்டினார்.

இதைத் தொடர்ந்து, சீனாவை பழிவாங்க அவர் அமெரிக்காவில் சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்க தொடங்கினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனாவும் அதிக வரி விதித்தது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் தொடங்கியது.
இந்த வர்த்தக போர் உலக நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எரிபொருள், உணவு பொருட்களின் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளை வளர்ந்து வரும் நாடுகள் உள்பட பல்வேறு நாடுகள் எதிர்கொண்டுள்ளன.
இதனிடையே, ஒரு கட்டத்தில் சீன பொருட்களுக்கு அமெரிக்கா 145 % வரி விதித்தது. இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், புதிய வரி விதிப்பை இரு நாடுகளும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தன.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தற்போது சீனாவிற்கான பரஸ்பர வரிவிதிப்பிற்கு இன்னும் 90 நாட்கள் கூடுதல் அவகாசம் அளித்துள்ளார்.