தாய்லாந்தில் ரெயில் விபத்து...! கிரேன் சரிந்து 22 பேர் பலி... 30 க்கும் மேற்பட்டோர் காயம்...! - Seithipunal
Seithipunal


தாய்லாந்தின் பாங்காக் நகரிலிருந்து வடகிழக்கில் உள்ள உபோன் ரத்சதானி மாகாணம் நோக்கி இன்று காலை புறப்பட்ட ரெயில் பேரிடர்ச்சியில் சிக்கியது.

ரெயில் பாங்காக்கிலிருந்து 230 கிலோமீட்டர் தொலைவில் நகோன் ரச்சசீமா மாகாணத்தின் சிகியோ மாவட்டத்தை கடந்தபோது, ரயில் பாதையில் நடைபெற்று வந்த அதிவிரைவு ரெயில் திட்ட பணிகளில் பயன்படுத்தப்பட்ட கிரேன் திடீரென சரிந்து ரெயிலில் ஒரு பெட்டியின் மீது விழுந்தது.

இதனால் ரெயில் பாதை புரண்டு பயணிகள் பெரும் அபாயத்தில் சிக்கினர். சம்பவத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர், மேலும் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதிகாரிகள் பாதிப்புகளை குறைக்க மற்றும் பயணிகளை பாதுகாக்க உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Train accident Thailand Crane collapses killing 22 people and injuring more than 30


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->