பிரான்சில் துப்பாக்கிச் சூடு - மூன்று பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


பிரான்ஸ் நாட்டில் உள்ள மத்திய பாரிஸில் 60 வயதுடைய ஒரு நபர் திடீரென தான் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அருகிலுள்ளவர்களை சரமாரியாக சுட்டார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை அருகிலுள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை கைது செய்தனர். இருப்பினும், தாக்குதலுக்கான காரணம் குறித்து தெளிவாகத் தெரியவில்லை. 

இந்த துப்பாக்கிச்சூடு குறித்து குற்றவாளியிடம் போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples died for gun shoot in franze


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->