உலக நாடுகள் மீதான ட்ரம்பின் அதிக வரி விதிப்பு; அதிகாரத்தை மீறி செயல் என வர்த்தக நீதிமன்றம் தடை விதித்துள்ளது..! - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றத்தில் இருந்து இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு வரியை உயர்த்தினார். குறிப்பாக , அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய தயாரிப்புகளுக்கான வரி 27 சதவீதமாக உயர்த்தப்பட்ட நிலையில், பின்னர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், உலக நாடுகள் மீதான அமெரிக்காவின் அதிக வரி விதிப்புக்கு அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தடை விதித்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் வரிவிதிப்பு கொள்கைக்கு எதிராக அமெரிக்காவின் பல மாகாணங்களில் வழக்கு தொடரப்பட்ட்டுள்ளன.  

இந்த வழக்கை விசாரித்த, வர்த்தக நீதிமன்றம் உலக நாடுகள் மீதான அமெரிக்காவின் அதிக வரி விதிப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டதோடு, வரிகளை நியாயப்படுத்த டிரம்ப் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தியதை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

மேலும், அனைத்து உலக நாடுகள் மீதும் ஒருதலைப்பட்சமாக வரி விதிக்கும் அதிகாரத்தை அதிபருக்கு வழங்கவில்லை என்றும்,  அதிபர் டிரம்ப் தனக்கு அளித்த அதிகாரத்தை மீறி செயல்பட்டுள்ளார் என்று சர்வதேச வர்த்தக நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு வெளியானதும் டிரம்ப் நிர்வாகம் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Trade Court has banned Trumps high tariffs on countries around the world as an act of abuse of power


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->