குரோஷியாவின் தலைநகரில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல்..!
The Indian embassy in the Croatian capital has been attacked
ஐரோப்பா நாடான குரோஷியாவின் தலைநகர் சாகிரேப்பில் இந்திய தூதரகத்தின் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தூதரகத்திற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் இந்திய தேசிய கொடியை அகற்றியுள்ளனர். அத்துடன், தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் காலிஸ்தான் ஆதரவு கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குரோஷியாவில் இந்திய தூதகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் குரோஷியா அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
The Indian embassy in the Croatian capital has been attacked